ஐதராபாத்:
நண்டை பானைக்குள் மூடி வைத்தால் வெளியில் தெரியாமலா போய் விடும். அதுபோல்தான் சமந்தா விவகாரமும் உள்ளது.


காதல் கிசுகிசுவில் அதிகமாக அடிபட்டவர்கள்... இப்பவும் பேசப்பட்டு வருபவர்கள் சமந்தா, நாக சைதன்யாதான். திருமணம் நடக்க போகிறது என்பது வரை இவர்களை பற்றி தகவல் வந்தது. இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர் என்றும் படங்களை இணைய தளத்தில் வெளியாகி பரபரத்தது. ஆனால் இருவரும் இதை மறுத்தே வருகின்றனர்.


சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் சமந்தா, நாக சைதன்யா ஆகியோர் வந்துள்னர். திருமணம் முழுவதும் சமந்தா, நாக சைத்தன்யா இருவரும் ஒன்றாக சுற்றியுள்ளனர். இந்த படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


அது நாங்க இல்லீங்கோ... எங்க டூப்புங்கன்னு சொல்லிடாதீங்கோ...


మరింత సమాచారం తెలుసుకోండి: