சென்னை:
செயலும், சிந்தனையும் வித்தியாசம் என்றால் அது யாராக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பினால் கோடம்பாக்கம் நடிகர் பார்த்திபனைத்தான் சுட்டிக்காட்டும். இதை யாரும் மறுக்க முடியாது.


அந்தளவிற்கு வித்தியாசத்தை தன் போக்காக கொண்டுள்ள நடிகர் பார்த்திபன் தற்போது அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்‘ என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான கெட்–அப்பில் நடிக்கிறாராம்.


இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ்.ரகுநாதன் கூறுகையில், “எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நினைப்பதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் திறமை பார்த்திபனுக்கு உண்டு. இந்த கதாபாத்திரத்திற்கு பார்த்திபன் மட்டுமே சரியான ஆள் என்பதால் அவரிடம் கதையை கூறினோம். பிடித்து போனதால் ஒத்துக்கொண்டார். அதுமட்டுமா... அந்த கதாபாத்திரத்துக்கான கெட்டப்பை உருவாக்கியதும் அவர்தான் என்றார் பெருமிதமாக.


எப்போதும் ஹீரோதான் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் மத்தியில் எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் ஜொலிப்பவராக பார்த்திபன் உள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: