சென்னை:
பேஸ் பார்த்து செலக்ட் செய்தது போய் இப்போது பேஸ்புக் பார்த்து செலக்ட் செய்யும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. இந்த புதுமை யார் செய்தது தெரியுங்களா?


தமிழ் சினிமாவில் எப்போதும் புதுமைகளையே தேடி தேடி செய்பவர் இயக்குனர் பார்த்திபன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் தான் இயக்கும் அடுத்த படத்திற்கு பேஸ்புக்கின் மூலம் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறார் என்பது தான் பரபரப்பான செய்தி. தற்போது பேஸ்புக்கில் முக்கிய செய்தியாக வலம் வருகிறது.


பிரபல நடிகர், திரைப்பட இயக்குனரான பார்த்திபன் தன்னோட அடுத்த படத்திற்கு நடிகர் ஆர்யா சாயலில் இருக்க வேண்டும். நடிகை சுமார் 25 வயது மாநிறம்/கருமை அன்பான முகம் கொண்டு இருக்க வேண்டும் என தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தார். இப்போது ஆளாளுக்கு தங்களுடைய புகைப்படங்களை போட்டு வருகின்றனர். 


ஒரு சிலர் தங்களுடைய உண்மையான புகைப்படத்தை பதிவேற்ற சிலரோ புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து பார்த்திபனை கிண்டல் செய்து வருகின்றனர். நல்லதுதான் செய்யமாட்டீங்க... புதுமைகளை செய்பவரை கலாய்ப்பது சரியில்லை. உங்களில் யாருக்காவது வாய்ப்பு கிடைத்தால்... யோசியுங்கள்...



మరింత సమాచారం తెలుసుకోండి: