சென்னை:
இன்னும் 2 வாரத்திற்கு பிறகுதாங்க... பிறகுதாங்க... என்று படக்குழு சொல்லியிருக்கு என்று கோலிவுட் போஸ்டர் பாய் சொல்றாருங்க...


என்ன விஷயம் என்று விசாரித்தால்...  சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புகள் ஐரோப்பாவில் நடந்து வந்தது. இங்கு நடந்த படப்பிடிப்பை ரகசியமாக எடுத்த யாரோ... அதை இணையத்தில் பதிவேற்ற டென்ஷானது படக்குழு. அப்புறம் தல அஜித்தின் இந்த படம் குறித்த எந்த தகவலும் கிடைக்காதவாறு படக்குழு செம ஸ்ட்ரிக்டாக இருந்தது.


இப்போ... படக்குழுவினர் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிவிட்டனராம். இந்த படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளும், காஜல், அஜித்துடன் இடம்பெறும் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று கோலிவுட் உளவாளிகள் சொல்லியிருக்காங்க. அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் 2 வாரத்திற்கு பிறகு தொடங்குமாம்... எப்படியோ போஸ்டர் பாய் கிடைச்ச தகவலை சொல்லிட்டார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: