அஜித் என்றாலே அவருடன் நடித்த அனைத்து ஹீரோயின்களும் அவர் நல்குணத்தை புகழ்ந்து தான் பேசுவார்கள். அந்த நற்குணத்தை வைத்து தான் இவர் தன்னுடன் நடித்த ஷாலினியையே காதலித்து திருமணம் செய்தவர்.

ஆனால், இவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு போதும் காதலை வெளிக் காட்டியதே இல்லையாம், ஒரு நாள் ஷாலினியை காதலிப்பதாக அவர் தெரிவிக்க, ஷாலினி அதைப் பற்றி வீட்டில் பேசுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் அமர்க்களம் படப்பிடிப்பில் ஷாலினியை கையை அறுப்பது போல் ஒரு காட்சி(படத்தில் இருக்கும்) எடுத்தார்களாம், அப்போது தெரியாமல் உண்மையாகவே ஷாலினி கையில் லைட்டாக கத்தி பட, இரத்தம் வர தொடங்கியதாம்.
இதைப்பார்த்து அதிர்ந்த அஜித் மிகவும் பதறிவிட்டாராம், ஷாலினி அதை பெரிதும் காட்டிக்கொள்ளாமல் நடிக்கத் தொடர, அஜித்திற்கு ஷாலினி மேல் மேலும் மரியாதை வர, இவர் தான் தன் மனைவி என்று அன்றே முடிவே செய்துவிட்டார்.
click and follow Indiaherald WhatsApp channel