நீண்ட இடைவெளிக்கு பிறகு, சூரஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'கத்திச்சண்டை' திரைப்படத்தில், காமெடி கிங் வைகை புயல் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


வைகை புயல் வடிவேலு, தனது காமெடி காட்சிகளுக்கான டப்பிங் பணிகளில், தீவர ஆர்வம் காட்டி வருகிறார். அவரது டப்பிங் காட்சிகளுக்கு உற்சாகத்துடன் வசனம் பேசி வருகிறாராம்.


மேலும் இந்த படத்தில், தன்னுடன் நடித்த பிற காமெடி நடிகர்களும், சிறப்பாக டப்பிங் பேச வேண்டும் என்பதற்காக அவர், அவர்கள் டப்பிங் பேசும் போது, கண்காணித்து வருகிறாராம். 


இந்த தகவலை படக்குழுவினரே தெரிவித்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: