ஆரணி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவ் குமணன். நாடக நடிகரான இவர் தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு  உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவர் நடிகர் சங்க தேர்தலின் போது, விஷாலின் 'பாண்டவர் அணி' வெற்றி பெறுவதற்காக, அரும்பாடுபட்டுள்ளார். இதன் மூலம் விஷாலுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், விஷால், தனது 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வாசுதேவிற்கு அளித்துள்ளார். இவர் விஷாலின் நண்பராக 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நாடகத்தில் நடித்து வந்த தன்னை, நட்பின் அடிப்படையில் முதன்முறையாக சினிமாவில் காலெடுத்து வைக்க வாய்பளித்த விஷாலுக்கு, வாசுதேவன் தனது நன்றிகளை இன்று தெரிவித்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: