இந்திய கிரிக்கட் வீரர் டோனியின் பையோகிராபிக்கை கொண்டு தற்போது 'எம் எஸ் டோனி தி அன் டோல்ட ஸ்டோரி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நீரஜ் பான்டே இயக்கிய இந்த படத்தில் சுஷாந்த் சிங்க் ராஜ்புட், டோனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 


ஹிந்தியில் உருவான இந்த படத்தை தமிழில் மொழியாக்கம் செய்து, வெளியிட, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக இந்த படத்தை தமிழில் ப்ரொமோட் செய்ய, வரும் செப் 23-ந்தேதி டோனி சென்னைக்கு வருகிறார். 


சென்னை சத்யம் சினிமாஸில், இந்த விழா நடைபெறுகிறது.இதில் டோனி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர். மேலும் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் உலகெங்கும் வரும் செப் 30-ந்தேதி வெளிவருகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: