சென்னை:


இல்ல... இல்ல... என்று சொன்னாலும் பூனைக்குட்டி அவ்வபோது வெளியில் வந்துவிட்டுதான் போகிறது. அதற்கு இதுவும் ஒரு உதாரணம்...


நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ஆனால் இருவரும் மவுனத்தையே பதிலாக சொல்கின்றனர்.


கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கசவு சேலை கட்டிக் கொண்டாடியுள்ளார். இருமுகன் படம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் நயன்.


இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்துள்ள மகிழ்ச்சியில் ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.


நயன் கேரளா புடவையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்துள்ள செல்பி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இதுக்கு என்ன சொல்ல போறீங்க நயன்...



మరింత సమాచారం తెలుసుకోండి: