சென்னை:


விடமாட்டோம்... நீதிமன்றம் சென்று நீதி பெறுவோம்... இது சினிமா "பஞ்ச்" டயலாக் இல்லீங்க... தன் மீது நடிகர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நடிகர் சரத்குமார் கூறியதுதான்.


என்ன விஷயம்ன்னா... நடிகர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய முன்னார் நடிகர் சங்க பொறுப்பாளர்கள் மீது கோர்ட்டில் இப்போதுள்ள நிர்வாகிகள் கேஸ் போட்டு இருக்காங்க.


மேலும் இந்த 3 பேரையும் நடிகர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து இருக்காங்க. இதுகுறித்து தான் சரத்குமார் காட்டமாக பதில் சொல்லியிருக்கார்.


எப்படி? இப்படி? "பத்திரிக்கைகளை பார்த்து தான் விஷயம் தெரிந்துகொண்டேன். இதுகுறித்து எந்த கடிதமும் எனக்கு இதுவரை வரவில்லை.


ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் அவர்கள் இதுவரை என்னை நேரில் அழைத்து விளக்கம் கேட்கவில்லை."... இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று நீதி பெறுவோம் என்று சொல்லியிருக்காருங்க... சரத்குமார்.


அதெல்லாம் சரி... நீங்க தோல்வி அடைஞ்ச உடனே கணக்கு வழக்குகளை ஒப்படைச்சிருந்தா இப்படி ஒரு கேஸ் வந்திருக்குமா சார்... என்று கேட்கின்றனர் நடுநிலையாளர்கள்...


మరింత సమాచారం తెలుసుకోండి: