சென்னை:
அடேய் வதந்தி வாயன்களா... உங்களுக்கு நான்தான் கிடைச்சேனா என்று கவுண்டமணி குமுறுக்கிட்டு இருப்பார். அவருக்கு பதில் அவரது செய்தி தொடர்பாளர் செம டென்ஷாகி அறிக்கை விட்டுள்ளார்.


என்ன விஷயம் என்றால்... கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களை ஒரு செய்தி செம பிராண்டு பிராண்டி வருகிறது. என்னன்னா... கவுண்டமணி இறந்து விட்டார் என்பதுதான். 


தமிழ் திரையுலகில் இன்றும் நகைச்சுவையில் அதகளம் செய்பவர் என்றால் கவுண்டமணிதான். ஆனால் இவர் இறந்து விட்டாதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்புவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் கவுண்டமணி இதற்கெல்லாம் பதில் சொல்வதே இல்லை. அவர் இதுவரை எந்த பத்திரிகைக்கும் பேட்டி என்பதும் கொடுப்பதில்லை.


இந்நிலையில் மீண்டும் கவுண்டமணி இறந்து விட்டதாக வதந்தி பரவ... செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி இதுகுறித்து காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அவ்வப்போது கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார்? அவர்களுக்கு என்ன பலன்? 


 கவுண்டமணி ஆரோக்கியமாக உள்ளார். புதிய படத்தில் நடிக்க கதை கேட்டு கொண்டு இருக்கிறார். எனவே ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: