சென்னை:
மீண்டும் அதிரடியாக களத்தில் குதித்துள்ளார் லிங்குசாமி. இத்தனை காலமாக தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய அவர் இனி வரிசையாக படங்களை இயக்க போகிறார் என்று கோடம்பாக்கம் கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காங்க...


ஆமாங்க... விஷாலை வைத்து சண்டகோழி பார்ட்-2 வை எடுக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார் லிங்குசாமி. அதோடு அல்லு
அர்ஜீனை தமிழில் நேரடியாக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


 இந்த படம் தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் ரெடியாகுதாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்துள்ளது_ 
இந்த விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் பேசி அனைவரையும் வியக்க வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: