
சிறு வயதில் தனது வீட்டில் இருந்த டூ வீலரை அவர் ஓட்டி பார்க்க ஆசைப்பட்டதாகவும் அவரது தந்தை பல்லாவரம் லிமிட்டை தாண்டி எங்கேயும் ஓட்ட கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறி வண்டியை கொடுத்ததாகவும் கூறினார். ஆனால் சுட்டி பெண்ணான சமந்தா சென்னை ஏர்போர்ட் வரை வண்டியை ஓட்டி சென்ற போது லைசென்ஸ் இல்லாமல் காவல் துறை அதிகாரிகளிடம் சிக்கிவிட்டாராம்.

ஆனால் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சவே சின்ன பெண் என்பதால் மன்னித்து காவல் துறை அதிகாரிகள் சமந்தாவை விட்டு விட்டனராம். செப்டம்பர் பதிமூன்றாம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் யூ டர்ன் வெளியாக உள்ளது. இந்த படத்தை பவன் குமார் இயக்கியுள்ளார். மேலும் இதே நாளில் சமந்தா சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்த சீமராஜா படமும் வெளியாக உள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel