ஹரியானாவில் பெண் குழந்தையை ஏமாற்றி கடத்தி திருமணம் செய்ததுடன் பாலியல் வன்முறையிலும் ஈடுபட்ட நபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் 11 வயதே ஆன பெண் குழந்தையை ஏமாற்றி கடத்திச் சென்ற நபர் மசூதியில் வைத்து அந்தக் குழந்தையை திருமணம் செய்துள்ளார். அங்கு குழந்தையின் வயதை 22 என மாற்றிக் கூறியுள்ளார்.

பிறகு இதை அடிப்படையாக வைத்து பெண் வீட்டாரிடமிருந்து எதிர்ப்பு இருப்பதால் இருவருக்கும் பாதுகாப்பு கேட்டு சண்டிகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளான்.

பிறகு டெல்லி, சண்டிகர் என மாறி மாறி பல்வேறு ஹோட்டல்களுக்கு அந்தக் குழந்தையை அழைத்துச் சென்று அங்கு வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

இந்நிலையில் இவன் அளித்த புகார் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றம் இரண்டு காவலர்களை அனுப்பியது. காவலர்களின் விசாரணையில் அந்த பெண் குழந்தையின் உண்மையான வயது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உஷாரான காவல்துறையினர் அவனை கைது செய்து போஸ்கோ உள்ளிட்ட பெண் குழந்தைகளுக்கு தீங்கிழைப்பதற்கு எதிரான கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை காணாமல் போனதாக மே 11'ம் தேதி குழந்தையின் சகோதரர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மே 30'ம் தேதி குழந்தை மேவாத் எனுமிடத்தில் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த உள்ளூர் காவல்துறை குழந்தையை மீட்டு வாக்குமூலம் பெற்றுக் கொண்டு குழந்தையை உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: