திருவண்ணாமலை:
ரூ.6500க்கு ரூ. 300 வந்திருக்கு... 100 ரூபாய்க்கு 500 ரூபாய் வந்திருக்கு... இப்படி மாற்றி மாற்றி அள்ளி அள்ளி தந்துள்ளது தனியார் வங்கி ஏடிஎம்.


அட உண்மைதாங்க... திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது.


இங்கு தனது வங்கி கணக்கில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் பணம் எடுத்துள்ளார்.


அவருக்கு ரூ.6,500க்கு பதிலாக வெறும் ரூ.300 மட்டுமே வந்துள்ளது. ஆனால் செல்போன் மெசேஜில் ரூ.6500 எடுத்ததாக தகவல் செல்போனில் வந்துள்ளது. இதனால் அவர் வெறுத்து போய் உள்ளார். இதற்கிடையில் இந்த ஏடிஎம்மில் பணம் எடுத்த சிலருக்கு அதிர்ஷ்டம் மிஷினை பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது.


எப்படி தெரியுங்களா? ரூ.100க்கு பதிவு செய்தபோது ரூ.500 ம், ரூ.200க்கு- ரூ.1000, ரூ.300க்கு- ரூ.1500 வந்துள்ளது. இந்த செய்தி பரவ... மக்கள் பலர் உடன் இந்த ஏடிஎம் மையத்தில் போட்டி போட்டு பணத்தை எடுத்துள்ளனர். அதிர்ஷ்டம் செய்தவர்களுக்கு ஒன்று இரண்டாக பணம் கிடைத்ததாம். இதனால் ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் மிக விரைவில் காலியாகி உள்ளது என்று தகவலறிந்த சிலர் தெரிவித்துள்ளனர். 



మరింత సమాచారం తెలుసుకోండి: