புதுடில்லி:
எந்த ஏடிஎம்மில் இருந்தும் எந்த வங்கி கணக்கிற்கும் டெபாசிட் செய்யலாம். வந்திடுச்சு ஒரு புதிய முறை. என்னன்னு தெரிஞ்சுக்குவோமா?


வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம் என்ற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதுதான் அது. 


ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அல்லாமல் எல்லா வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இது நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


ஆனால்வா  டிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில்தான் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது. இப்போது அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளதாம். இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி பச்சைக்கொடி காட்டி விட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



మరింత సమాచారం తెలుసుకోండి: