இன்றைய காலத்தில் தலைமுடி பிரச்சனைகள் இல்லாதவர்களே இல்லை. இதற்கு காரணம் இன்றைய உணவு பழக்கங்களும், ஹார்மோன்கள் மாறுபடுவதும் தான். 


தலைமுடி பராமரிக்க நாம் மூலிகை எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.


இதன் செய்முறையை இப்போது நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் :


தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர் 
நெல்லிக்காய் - 10 
செம்பருத்தி பூ - 10 
மருதாணி இலை - 1 கையளவு 


நெல்லிக்காயில் இருக்கும் கொட்டையினை நீக்கி, சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதனுடன் செம்பருத்தி பூ மற்றும் அரைத்த மருதாணி இலை ஆகியவற்றை கலந்து தேங்காய் எண்ணையில் சேர்த்து கொள்ளுங்கள். 


அடுத்து அடுப்பில் வைத்து, இந்த எண்ணெயை நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெய் காய்ச்சும் போது அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளுங்கள். 


பிறகு, காய்ச்சிய இந்த எண்ணெயை சூரிய வெளிச்சம் படும்படி, 4 நாட்கள் வைத்துவிட்டு தலைக்கு தேய்க்க உபோயிக்கலாம். இந்த எண்ணெய் நீண்ட நாட்கள் இருக்கும் கெட்டுப்போகாது.

மூலிகை எண்ணெய்.... க்கான பட முடிவு


మరింత సమాచారం తెలుసుకోండి: