புதுடில்லி:
இந்தியாவே முடங்கினால்... ஆமாங்க... அப்படிதான் நடக்க உள்ளது. என்ன விஷயம் என்று தெரியுங்களா?


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் நாளை நடத்த உள்ள வேலை நிறுத்தத்தால் இந்தியா முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்  என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் நாளை (2ம் தேதி) ஸ்டிரைக்கில் குதிக்க உள்ளது தெரிந்த விஷயம்.


இந்த ஸ்டிரைக்கால் இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ள 15 கோடி ஊழியர்கள் பங்கேற்கின்றர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போ... இந்தியாவே முடங்கி போனது போல்தானே...


మరింత సమాచారం తెలుసుకోండి: