சென்னை:
சென்னையை குளிர்விக்குது மழை... குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் வகையில் அதிக மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, தரமணி உட்பட பல  பகுதிகளில் கனமழை பெய்தது. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரத்திலும் விட்டு விட்டு மழை பெய்தது.


வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் சீர்காழி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நீர்நிலைகள் உயரும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: