சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் வருகிற 22ந் தேதி வெளிவரும் என்று தெரிகிறது. படத்தின் எல்லா ஏரியாக்களும் விற்று விட்டது. கபாலியின் பாண்டிச்சேரி உரிமத்தை லெஜண்ட் மீடியா வாங்கியுள்ளது. இதன் உரிமையாளர் ஜி.பி. செல்வகுமார், பாண்டிச்சேரி கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார்.


அப்போது அவர் "பெரும் தொகை கொடுத்து 'கபாலி' உரிமையை வங்கியுள்ளோம். பாண்டிச்சேரியில் திருட்டு விசிடி அதிகம். எனவே 'கபாலி' மட்டுமல்ல எந்த படத்தின் திருட்டு விசிடியும் வராமல் பாதுகாப்பு தரவேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். 


அதோடு பாண்டிச்சேரி நகரின் தூய்மைக்கு பாடுபடுவோர்களுக்கு கபாலியின் முதல் ஷோவை இலவசமாக பார்க்க வைப்போம் என்றும் கூறினர். முதல்வர், கவர்னர் இருவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: