அரண்மனை-2வில் பேயாக நடித்த த்ரிஷா, இப்போது நாயகி படத்திலும் பேயாக நடித்துள்ளார். இதில் முதன்முறையாக அவர் டபுள் ரோலில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதையடுத்து தனுஷின் 'கோடி' படத்தில் அதிரடியான கதாநாயகியாக நடித்திருக்கிறார் த்ரிஷா.

இப்படத்தில் முதன்முறையாக அரசியல்வாதி வேடத்தில் பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார்.
இந்த படங்களைத் தொடர்ந்து சாக்லேட் பட டைரக்டர் மாதேஷ் இயக்கும் 'மோகினி' படத்திலும் பேய் கதையில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சமையல் காலை வல்லுனராக நடித்து வருகிறார் த்ரிஷா. இது சம்பந்தமாக சென்னையில் இருந்து லண்டனுக்கு தனது சமையல் டீமுடன் செல்லும் அவர் அங்கு ஒரு பேயிடம் சிக்கிக்கொள்கிறாராம். அதைத்தான் திகில் மற்றும் காமெடி கலந்து பண்ணியிருக்கிறாராம் மாதேஷ்.

மேலும் சாப்ட்டான நடிகை என்று இதுவரை பெயரெடுத்து விட்ட த்ரிஷா, இந்த படத்தில் சில காட்சிகளில் த்ரிஷாவை இது என்று ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அதிரடியான காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறாராம்.   



మరింత సమాచారం తెలుసుకోండి: