கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. தமிழ், தெலுங்கில் சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள், 'ரௌத்ரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இது ஒரு பேன்டசி கலந்த என்டர்டெயின்மென்ட் படம். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. சந்தோஷ் நாராயணனின் ரெகார்டிங் ஸ்டுடியோவில் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. மும்பை மற்றும் ஹாலிவுட்டில் ஸ்டுடியோக்களில் இதன் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. படத்தில் 80 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது.


இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. கார்த்தி முதல் ஆர்டிஸ்டாக டப்பிங் பேசினார். அடுத்த வாரம் நயன்தாராவுக்கு குரல் கொடுப்பவர் பேசுகிறார். ஸ்ரீதிவ்யா அவரது சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார். படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Find out more: