சென்னை:
சிம்புவின் மிகப்பெரிய ஒத்துழைப்பால்தான் இது முடிந்துள்ளது என்று பாராட்டி உள்ளார் டைரக்டர். யார் அது தெரியுங்களா?


அவர் ஆதிக் ரவிச்சந்திரன்தான். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில்தான் சிம்பு 3 வேடங்களில நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.


படப்பிடிப்பில் எடுத்த சில புகைப்படங்களும் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆதிக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதற்கு சிம்புவின் கடின உழைப்பு தான் காரணம். இதுதான் முதற்கட்ட படப்பிடிப்பு சீக்கிரமாக முடிய வைத்துள்ளது என்று டுவிட் செய்துள்ளார். என்னங்க இது ஆச்சரியம்... சிம்புவா... கோலிவுட்டே இந்த டுவிட்டர் பதிவை சொல்லி ஆச்சரியப்பட்டு வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: