'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்திற்கு பிறகு ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் இணைந்து ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை சீனிஷ் என்பவர் இயக்கவுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். 


கடந்த ஜூலை 5-ந்தேதி இந்த படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெற்றது. இதையடுத்து இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் 'பலூன்' என்பது இந்த படத்தின் தலைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இந்த படத்தில் ஜெய், அஞ்சலி இருவரும் பேய் தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல்கள்  விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: