ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில தினங்களாக, இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, திண்டுக்கல்லில் நடைபெற்று முடிவடைந்தது. 


இந்த செய்தியை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது சமூக வலைதள பக்கத்தில், 'முதற்கட்ட படப்பிடிப்பை 25 நாட்களில் நடத்தி முடிக்க இருந்தோம். ஆனால் சிம்பு, ஷ்ரேயா மற்றும் படக்குழுவினர் அனைவரின் கடின உழைப்பினால், படப்பிடிப்பை வெகு விரைவிலியே முடித்து விட்டோம்' என மகிழ்ச்சியாக பதிவு செய்திருந்தார். 


இதையடுத்து ரசிகர் ஒருவர், இந்த படத்தில் ஹன்சிகா நடிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.... இதற்கு அதிக ரவிச்சந்திரன், இந்த தகவலை யார் பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது பொய்யான செய்தி.. நிச்சியம் ஹன்சிகா இந்த படத்தில் நடிக்கமாட்டார். 

ஏஏஏ படப்பிடிப்பில் ஷ்ரேயா 


அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, சென்னை அல்லது துபாயில், இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க இருக்கிறது, அதற்குள் நாங்கள் ஹீரோயினை பரிசுசெலினை செய்துவிட்டு, அதிகார பூர்வமாக அறிவிப்போம்' என்று கூறியுள்ளார். 



Find out more: