சென்னை:
மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று பழமொழி சொல்ல கேட்டு இருப்பீர்கள்... ஆனால் இவர்கள் எந்த வகை என்றே சொல்ல முடியவில்லை... போதையில் நடந்த விபத்திற்கு சுவாதி ஆவிதான் என்று கிளப்பி விட்டுள்ளனர்.


நடிகர் அருண்விஜய் செம்ம போதையில் கண்மண் தெரியாமல் தன் காரை ஓட்டி வந்து போலீசார் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது சென்னையையே பரபரப்பாக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.


ஆனால் இப்படி நடந்ததற்கு படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவிதான் காரணம் என சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கும் சில "நெட்டிசன்கள்" கதை கட்டி வருகின்றனர். இவர்களுக்கு யாராவது சினிமாவிற்கு கதை எழுத சான்ஸ் தரலாம். 


எப்படி தெரியுங்களா? அருண்விஜய் இடித்த போலீசார் வாகனம்,  சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை அழைத்து சென்ற வாகனம். அருண் விஜயின் உடலுக்குள் புகுந்த சுவாதியின் ஆவிதான் இப்படி போலீசாரின் வாகனத்தை இடிக்க செய்துள்ளது என்று சிலர் சமூகவலைத்தளங்களில் வதந்தி கிளப்பி உள்ளனர். அடப்பாவிங்களா... காஞ்சனா கதைகளையே மிஞ்சிடுவீங்க போலிருக்கே... பீதியை கிளப்பினா பரவாயில்லை... இவங்க செய்யற இந்த வதந்தி இருக்கே... முடியலை... முடியலை...


మరింత సమాచారం తెలుసుకోండి: