சென்னை:
பாம்புக்கு பல் வலின்னா... தவளை தலைகீழாக டான்ஸ் ஆடுமாம். அதுபோல இருக்கு என்று கோலிவுட்வாசிகள் கமெண்ட் செய்கின்றனர் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு.


என்ன விஷயம் என்றால்... கோலிவுட்டின் நம்பர் 1 மட்டுமின்றி ராசியான நாயகி என்ற பெயர் நயன்தாராவுக்கு இருக்கு. தெலுங்கிலும் இவரது கொடிதான் பறக்கிறது. இது ஒரு புறம் இருக்க... நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இப்போ... நயன்தாரா தயாரிக்க விக்னேஷ்சிவன் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்காக இவர் நடிகர் சூர்யாவை பார்த்து கதை சொல்ல... ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை கேட்டுள்ளார். அதுக்கு பிறகுதான் நடந்துள்ளது இந்த கூத்து... கதையில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால் நயன்தாரா நாயகி ஓகே, இதில் ஹீரோ யார் என்று கேட்டு கலாய்த்துள்ளார்.


இதுதான் நயன்தாராவை செம டென்ஷன் ஆக்கி உள்ளதாம். இனி சூர்யா படத்தில் நடிக்க யாராவது கேட்டால் முடியவே முடியாது என்று சொல்வார் என்கின்றனர். ஆனால் இது உண்மையில்லை என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். எது உண்மை... எது பொய் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்லணும்...


మరింత సమాచారం తెలుసుకోండి: