தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தனுஷ், அதன் பிறகு பாடகர், தயாரிப்பாளர் ஆகிய அந்தஸ்துகளை பெற்று, பல உயரிய விருதுகளை எல்லாம் தட்டி சென்றார். இதையடுத்து தற்போது அவர்  மேலும் ஒரு அந்தஸ்தை பெற்றுள்ளார். அது என்னவென்றால்...


முதன்முறையாக அவர் ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்திற்கு 'பவர் பாண்டி' என்பது தலைப்பு. இதில் ராஜ் கிரண் தான் ஹீரோ. இந்த படத்தின் முதல் லுக் நேற்று இணையதளத்தில் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது. 


'பவர் பாண்டி' திரைப்படத்தில் ராஜ் கிரண் வயதான ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பிரசன்னா, சாயா சிங்க் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 

Image result for power paandi


மேலும் இந்த படத்தை தனுஷ் இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். சான் ரோல்டன் இந்த படத்தின் இசை பணிகளை மேற்கொள்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: