'தில்லுக்கு துட்டு' திரைப்படத்தை அடுத்து சந்தானம் நடிப்பில் தற்போது 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் உருவாகி வருகிறது.ஆனந்த பல்கி இயக்கும் இந்த படத்தை செல்வகுமார் தயாரிக்கிறார். இதில் சந்தானம் மற்றும் வைபவி சந்தியாளா இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 


பழம்பெரும் நடிகர் நாகேஷ் நடித்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தை தழுவி இப்படம் உருவாகுகிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் இசை உரிமைகளை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. 


சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல்களை, பிரபல திங்க் மியூசிக் நிறுவனம், நல்ல விலைக்கு வாங்கியுள்ளது. இது இந்த படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு அந்தஸ்தாக கருதப்படுகிறது. 


மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: