'அகிரா' திரைப்படத்திற்கு பிறகு முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் புது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்குவில் உருவாகி வருகிறது. இதில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், எஸ்.ஜெ.சூர்யா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். 


பெயரிடப்படாத  இந்த படத்திற்கு தினமும் பல்வேறு தலைப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் உறுதியான தலைப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 


தமிழ் மற்றும் தெலுங்குவில் பொதுவான பெயரை கொண்ட 'அபிமன்யு' தான் இந்த படத்தின் தலைப்பு என கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: