நடிகை ஷாலினி பாண்டே ஜபல்பூர் பெண்ணாவார். தெலுங்கு மொழி தெரியாத இவர் சென்ற ஆண்டு வெளியான படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் சினிமாவில் அறிமுகம் ஆனார். மொழியே தெரியாத போதும் கூட பாஷையை கற்றுக்கொண்டு சொந்த குரலில் டப்பிங் பேசி சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார்.



இந்த படமும் பிளாக்பஸ்டர் ஆகி ஷாலினி பாண்டேக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் தோழியாக மஹானடி படத்தில் நடித்தார் ஷாலினி பாண்டே. தமிழில் நடிகர் ஜீவா ஜோடியாக கொரில்லா என்ற குரங்கு படத்தில் அறிமுகமாக உள்ள ஷாலினிக்கு அதற்கு முன்னதாகவே அடுத்த தமிழ் படமும் அமைந்துள்ளது.



மூடர் கூடம் புகழ் இயக்குனர் நவீனின் மூன்றாவது படமான அக்கினி சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டே நடிக்க உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நாயகர்களாக நடிக்க பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: