லிஸ்டன்:
கிடு...கிடுவென்று பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர் தீயணைப்பு படை வீரர்கள்.


போர்ச்சுக்கல் நாட்டில் வேகமாக பரவி வரும் காட்டு தீயை அணைக்கும் பணியில் 3 ஆயிரம் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் தீயின் வேகம் அதிகம் இருப்பதால் அவர்கள் திணறி வருகின்றனர்.


ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லில் தற்போது கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதுவரை அங்குள்ள வனங்களில் 515 இடங்களில் தீ பரவி எரிந்து கொண்டிருக்கிறது.


இந்த தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1060 வாகனங்கள், 16 தீயணைப்பு விமானங்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் 3 ஆயிரம் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



మరింత సమాచారం తెలుసుకోండి: