அண்மையில் ஹிந்தி நடிகை கரீனா கபூரின் கணவரும், நடிகருமான ஸைப் அலி கான், தனது சமூக வலைதளத்தில், தான் அப்பாவாக போவதை மகிழ்ச்சியாக அறிவித்ததார் என்பதை நாம் அறிந்தோம். 


இதையடுத்து கரீனாவும் அவரது கணவரும், லண்டனிற்கு சென்று வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துக் கொள்ள மருத்துவர் ஒருவரை அணுகியதாக செய்திகளில் வெளிவந்தது. 


இதற்கு தற்போது கரீனா-ஸைப் அலிகான் தரப்பில் இருந்து அறிக்கை வந்துள்ளது.  'நாங்கள் இருவரும் அறிவுடையவர்கள்... அதனால் இந்த மாதிரி செயலை எல்லாம் செய்ய மாட்டோம். லண்டனிற்கும் செல்லவில்லை எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை. இது முற்றிலும் வதந்தி... பொய்யான செய்திகளை இப்படி பரப்ப வேண்டாம்' என்று அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: