இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், முகத்தழும்புகளால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதை சரி செய்ய அவர்கள், கடைகளில் கிடைக்கும் க்ரீம்கள் மற்றும் லோஷன்களை உபோயோகப்படுத்கின்றனர். ஆனால் இது  தழும்புகளை மேலும் அதிகரிக்க செய்கிறது.


முக தளும்புகளை குணப்படுத்த ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தலாம். இதில் இருக்கும் சிட்ரஸ் அமிலம், தழும்புகளை மறைய செய்யும். ஆரஞ்சு பழ பேசியல் செய்யும் முறையை நாம் இப்போது பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - கால் கப் 
கசகசா விழுது-1 டீஸ்பூன், 
சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை


இந்த மூன்றையும் பேஸ்ட் பதத்தில் கலந்து, இரவு படுக்கும் முன்பு பருக்கள் இருக்கும் இடங்களில், பூசி வரவேண்டும். நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 


இந்த முறையை வாரம் மூன்று நாட்கள் வைத்து, 1 மாதம் பின்பற்றி வந்தால் தழும்புகள் சுத்தமாக மறைந்து விடும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: