இன்றைய காலகட்டத்தில், இளம்பெண்கள் நீர்க்கட்டி பிரச்சினையினால், அவதிப்பட்டு வருகின்றனர். உணவு பழக்கங்கள் மாறுபடுவதுனாலும், குடும்ப சிக்கல், வருத்தம் போன்ற காரணங்களால் இந்த நீர்க்கட்டி உருவாகுகிறது. 


நீர்க்கட்டி பிரச்சனை இருந்தால், மாதவிடாய் சரியாக வராது. குழந்தை பாக்கியம் தள்ளி போகும். இதை சரி செய்ய தற்போது இயற்கை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.  அதனை தயாரிக்கும் முறையையும், உட்கொள்ளும் முறையையும் நாம் விளக்கமாக பார்க்கலாம். 


நீர்க்கட்டி தீர தேவையான இயற்கை மூலிகை பொருட்கள்:
துளசி-ஒரு கொத்து
கழற்சிக்காய்-3
நாட்டு கோழி முட்டை-1 (வெள்ளை கரு)
நல்லெண்ணெய்-50ml 


இதை உட்கொள்ளும் முறை: 3 கலர்ச்சிக்காய்யை பொடி செய்து, தூளாக்க வேண்டும். இதனுடன் துளசி சாறு, நாட்டு கோழி முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை சேர்த்து கலந்து, 50ml நல்லெண்ணையை வாணலியில் விட்டு, அதனுடன் இந்த கலவையை சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.இதை காலை உணவு உட்கொள்ளும் முன்பு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் பின்பற்றி வந்தால் நீர்க்கட்டி குணமடையும். 


குறிப்பு: இந்த மருத்துவத்தை ஏழு நாட்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: