சென்னை:
சூப்பர் இயக்குனருங்க அவரு என்று செல்வராகவனுக்கு ஹீரோயின் ரெஜினா குட் சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார். எதற்காக தெரியுங்களா?


'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வைத் தவிர ரெஜினாவிற்கு வேறு தமிழில் பெரிய அளவில் எந்த படமும் அமையவில்லை. இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. 


ஆரம்பித்ததும் தெரியாமல், முடித்ததும் தெரியமால் இந்த படத்தை மிக விரைவாக செல்வராகவன் இயக்கியுள்ளார். அவரா...? அதற்குள் படத்தை முடித்துவிட்டாரா என கோலிவுட்டில் கேள்விக்குறிகள் எழுந்தபடி உள்ளது.


இந்நிலையில் செல்வராகவன் ஒரு சூப்பர் இயக்குநர் என்று அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார் ரெஜினா.
ஒரு காட்சியை அவர் எப்படி படம் பிடிப்பார் என்பதை எப்போதுமே கணிக்க முடியாது.


சொல்லப் போனால் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்னும் திகில் படத்தை அவரின் கண்கள் வழியாகப் பார்க்க, நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: