பரதன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. அதில் ஒருவர் தைரியசாலியாகவும், இன்னொருவர் பயஉணர்வு கொண்டவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு வேடங்களில் ஒரு விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேசும், இன்னொரு விஜய்க்கு ஜோடியாக அபர்ணா வினோத்தும் நடிப்பதாக கூறப்படுகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, ஐதராபாத் மற்றும் சில வெளிநாடுகளில் நடந்த நிலையில் மீண்டும் சென்னையில் விரைவில் தொடங்கயிருக்கிறது. விஜய், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். கல்லூரிக்கு செல்லும் கீர்த்தி சுரேஷுக்கு, விஜய்க்குமிடையே காதல் ஏற்படும் அந்த காட்சிகளை சென்னையில்தான் படமாக்குகிறாராம் பரதன்.


மேலும் ரஜினி முருகன் படத்தில் படிக்க செல்வது போன்று கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு சில காட்சிகளை நடித்த கீர்த்தி சுரேஷ், இந்த படத்தில் கல்லூரிக்குள்ளே சென்று படிக்கும் காட்சிகள் உள்ளதாம். அந்த டிராக்கில்தான் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடம் பெரும் கலகலப்பான காதல் காட்சிகள் படமாகிறதாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: