சென்னை:
இல்லைங்க... இல்ல... இது வேற கதை... புதுகதை என்று இயக்குனர் ரஞ்சித்தே கூறிவிட்டார்.


என்ன விஷயம்ன்னா? ரஜினி - ரஞ்சித் மறு கூட்டணி குறித்த பேச்சுதான் டாக் ஆப் கோலிவுட்டாக உள்ளது. ரஜினியா... மீண்டும் அவர் படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாரா என்று ஆச்சரியப்படாத ஆளே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு பேச்சு தொடர்கிறது.


இந்த படம் கபாலியின் தொடர்ச்சி என்று சொன்னார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது வேறு கதை... கதை ரஜினிசாருக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது என்று இயக்குனர் ரஞ்சித் கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


இது புத்தம் புதிய கதை. இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் இந்தப் படம் இருக்கும். இது அரசியல் படமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. விரைவில் அனைத்து விவரங்களும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சீக்கிரம் சொல்லுங்கப்பா... கபாலி ஆரம்பிச்சு கொஞ்ச நாளில் சூடுபிடித்தது. இப்போ... இந்த படம் ஆரம்பிக்கும் போதே பரபரக்க ஆரம்பித்து விட்டது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: