டிகை ஆண்ட்ரியாவை போல் நடிகை தீபிகா படுகோனும் தற்போது ஒரு உண்மையை தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தீபிகா படுகோன், தமிழிலும் நடித்துள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இவர் நடிப்பில் பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான பத்மாவத் படம் பெரும் வெற்றி பெற்றது.
Image result for தைரியமாக உண்மையை சொன்ன நடிகை தீபிகா படுகோன்!

தீபிகா படுகோன் அண்மையில் சக நடிகரான ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தீபிகா புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சைக்குப் பிறகு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் தீபிகா. இதுதொடர்பாக பேசிய அவர், மன அழுத்த நோய் யாருக்கு வேண்டுமானலும் வரும் என்றார்.



மன அழுத்த நோய்க்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை என்று கூறிய அவர், மன அழுத்தத்திற்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடையலாம் என்றும் தீபிகா படுகோன் தெரிவித்தார். மன அழுத்த நோய் ஏற்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாகவே இருக்கும் என்றும் தொடர்ந்து மன சோர்வு ஏற்படும் என்றும் தனக்கான பாதிப்பை விளக்கினார் தீபிகா. மேலுல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் வேலையில் கவனம் வராது என்றும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பார்கள் என்றும் கூறினார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: