சென்னை:
விடாது கருப்பு... என்பதுபோல் ஒத்துழைப்பு கொடுத்தாலும் சிம்புக்கு வம்பு தொடர்ந்து வந்து தோளில் ஏறி உட்காரும் போல் உள்ளது.


இயக்குனர் கவுதம் மேனனுடன் ஏற்பட்ட மோதலால்... வருமா... வருதா என்று அச்சம் என்பது மடமையடா படம் தொங்கலில் விழுந்தது.

இதையடுத்து இருவருக்குள்ளும் சமரசம் ஏற்பட்டதை அடுத்து சிம்பு அந்த பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்தார். இதையடுத்து இந்த படத்தை வரும் 30ம் தேதி வெளியிட தீவிரமாக பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில்தான் சிம்புவிற்கு வம்பு ஆந்திரா வடிவில் வந்து சேர்ந்துள்ளது.


சும்மாவே பஸ், ரயில் பிடித்து வரும் வம்பே... சமாளிக்க முடியாமல் இருக்கும் போது பக்கத்து தேசத்தில் இருந்து ப்ளைட் பிடித்து வந்துள்ளது. தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட்டால்தான் படத்தின் சக்ஸஸ் ரேட் எகிறும். அதுதான் பாதுகாப்பும் கூட. 


 ஆனால் நாக சைதன்யாவின் பிரேமம் படம் அக்டோபர் 7 வெளியாவதால் அப்படத்தின் தயாரிப்பாளர் அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பை  வெளியிட எதிர்ப்பு தெரிவிக்க இப்போது இந்த படம் சிக்கலில் கிடந்து தவிக்கிறது.


இதனால் அக்டோபர் இறுதியில்தான் அச்சம் என்பது மடமையடா திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: