சென்னை:
உள்ளாட்சி தேர்தலால் போலீசார் அனைவரும் வருத்தத்தில் உள்ளனராம். எதற்காக தெரியுங்களா?
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் போட்டார் பாருங்க ஒரு உத்தரவை. என்னன்னா?
“காவல் துறையில் தற்போது காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் பாதுகாப்பு பணிக்கு போதுமான காவலர்கள் இல்லை. தேர்தல் முடியும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது. விடுமுறையில் சென்ற போலீசாரும் உடன் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.” என்று உத்தரவுதான்.
இதனால் விடுமுறை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் வேதனையில் உள்ளனராம்.