சென்னை:
முடியாது... முடியாது சிறையிலேயே இரு என்று சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன் (84). சிலை கடத்தல் மன்னன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும். இவரை கடந்த ஜீன் மாதம் சிலை கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவர் ஏற்கனவே ஜாமீன் கேட்க அந்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் ஜாமீன் கேட்டு தீனதயாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அந்த மனுவில், 65 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதாகவும், வயதான தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி மீண்டும் தள்ளுபடி செய்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: