புதுடில்லி:
போதை ஏறிப்போச்சு... போலீசாரை தாக்கியாச்சு... கம்பி எண்ண ஆரம்பிச்சாச்சு... இது டில்லியில் நடந்த கூத்து.


டில்லி புறநகரைச் சேர்ந்த வடக்கு ரோகினி பகுதியில் நள்ளிரவில் 2 கான்ஸ்டபிள்கள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த நேரத்தில் செம போதையுடன் அவ்வழியாக லலித் (29), சச்சின் (23) என்ற 2 பேர் வந்துள்ளனர். இருவரும் சகோதரர்கள். இவர்களை பிடித்து கான்ஸ்டபிள்கள் விசாரித்துள்ளனர்.


அப்போது எதிர்பாராதவிதமாக கான்ஸ்டபிள்கள் இருவரையும் சகோதரர்கள் தாக்க... சுதாரித்துக்கொண்டு அவர்கள் ரோகினி போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்க... அப்புறம் என்ன? போலீசார் விரைந்து வந்து இருவரையும் அள்ளிப்போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து கேஸ் பதிவு செய்து உள்ளே தள்ளி உள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: