
செல்வராகவனோடு படம் செய்கையில் ஒவ்வொரு நாளும் புது பட ஷூட்டிங் போல இருந்தது. ஒவ்வொரு விஷயத்திற்கும் மெனக்கெட்டு வேலை செய்யும் செல்வராகவனின் எழுத்து மற்றும் படைப்பிற்கும் அவரது சிந்தனைக்கும் அவரது படங்கள் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு.

செல்வாவின் இயக்கத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு நடித்திருக்கிறேன் இந்த படத்தில். இந்த படம் எங்கள் அனைவரின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமையும். நான் மீண்டுமொரு படத்தில் செல்வராகவனுடன் பணிபுரிய விரும்புகிறேன், வேறு கதை எழுதும்பொழுது கண்டிப்பாக என்னை கூப்பிடவேண்டும் என்றார் சூர்யா.
click and follow Indiaherald WhatsApp channel