பொதுவாக வாழ்க்கைக்கு பணம் மட்டுமே தேவை இல்லை. பணம் இருந்தால் எல்லாம் கிடைத்து விடாது. ஆயுள், ஆரோக்கியம் என்பது நம் கையில் இல்லை. கடவுள் கையில் தான் உள்ளது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அது உண்மை தான்...


ஆயுள், செல்வம், கல்வி செல்வம், ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் கிடைக்க நாம் சனிக்கிழமை விரதம் இருக்கலாம். 


சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷமான நாளாகும். அதனால் சனிக்கிழமை இந்த விரதத்தை நாம் மேற்கொள்ளலாம். பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். 


புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமான நாளாகும். அதனால் அன்றைக்கு பெருமாளை நினைத்து விரதம் இருந்தால் சகல செல்வமும் பெற்று வாழ்வில் முன்னேறுவோம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: