அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி பஸ் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே 50 பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பள்ளி பஸ் சென்று கொண்டிருந்தது. முஹாவா என்ற கிராமம் அருகே வந்த போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் பாய்ந்தது. அட்டாரி எல்லை அருகே இந்த விபத்து நடந்துள்ளது.


தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த மீட்பு படையினர் வாகனத்தை மீட்கும் பணியில் குதித்தனர். இதில் 6 குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: