மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் பிரையன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் லாரா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் லாராவிடம் இருந்து ஆடியோ கிளிப் ஒன்று வர அதில் தான் நலமாக உள்ளதாகவும் விரைவில் ட்ரீட்மெண்ட் முடித்து திரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை சச்சின் தெண்டுல்கருடன் ரசித்த லாரா, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்தார்.
click and follow Indiaherald WhatsApp channel