ஐதராபாத்:
கன்பார்ம் ஆகிடுச்சு... கன்பார்ம் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க... எதுக்குன்னு விசாரிச்சா... முருகதாஸ் இயக்க, மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் ஹீரோயினாம். 


அவரு யாரு தெரியுங்களா? தமிழிலும், தெலுங்கிலும் நன்கு அறிமுகமான ராகுல் ப்ரீத் சிங்தான் அவர். 


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பது உறுதியாகிவிட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குது. 


கதாநாயகிக்காக காத்திருந்தவர்கள் இப்போது ஒருவரை புக் செய்து விட்டனர் அவர் ராகுல் ப்ரீத் சிங்தான். இவர் 2 மொழிகளிலும் பரிச்சயமானவர் என்பதால் செலக்ட் ஆகி இருக்காராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: