'தெய்வ திருமகள்' திரைப்படத்தில் நடிக்கும் போதே, அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் காதலித்து வந்தனர். அதன் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் முறைப்படி, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 


இதையடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் வாழ்க்கையில் சில விரிசல்கள் விழுந்தன. விஜய் குடும்பத்தினருக்கு அமலா பால் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அமலா பால் அதை கேட்காமல் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


மேலும் இயக்குனர் விஜய்யுடன் சேர்ந்து தங்காமல், தனியாக வசித்து வந்தது பிரச்சனையை மேலும் கிளப்பியது. 


இந்நிலையில் இருவரும் பிரிய முடிவு எடுத்து, சட்டப்படி விவகாரத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமலா பால், விஜய்யிடம் இருந்து ஜீவனாம்சம் வாங்குவார் என எதிர்ப்பார்த்த நிலையில்,அவர் எனக்கு ஜீவனாம்சமா.... அதுலாம் எதுவும் வேணாம்.... எனக்கு விவாகரத்து கிடைச்சாலே போதும் என்று கூறியுள்ளாராம்


మరింత సమాచారం తెలుసుకోండి: