மும்பை:
டுமீல்... ஓடும் ரயிலில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர் பயணிகள். எதனால் தெரியுங்களா?


மும்பையில் ஒடும் ரயிலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.


 மும்பையில் ரயில்வே போலீஸ்காரர் அமர் கெயிட்வாட் என்பவர் போரிவலியில் இருந்து சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரயிலில் காவல் பணி மேற்கொண்டிருந்தார். 


 ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணித்த அவர் சுமார் 5.30 மணியளவில் ஓடும் ரயிலிலே தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பயணிகள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


 ஆனால் செல்லும் வழியிலே அவரது இறந்துவிட்டார்.  இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: